எண்: 1242
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல் (Soliloquy)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!
சாலமன் பாப்பையா: என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
மு.கருணாநிதி: அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க