அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

எண்: 847
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: புல்லறிவாண்மை (Ignorance)
இயல்: நட்பியல் (Friendship)

மு.வரதராசனார்: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

சாலமன் பாப்பையா: அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

மு.கருணாநிதி: நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்