
எண்: 358
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: மெய்யுணர்தல் (Truth-Conciousness)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
சாலமன் பாப்பையா: பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.
மு.கருணாநிதி: அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்