நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

எண்: 331
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: நிலையாமை (Instability)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)

மு.வரதராசனார்: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

சாலமன் பாப்பையா: நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

மு.கருணாநிதி: நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்