எண்: 257
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: புலால் மறுத்தல் (Abstinence from Flesh)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
சாலமன் பாப்பையா: இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
மு.கருணாநிதி: புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்