எண்: 149
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: பிறனில் விழையாமை (Not coveting another"s Wife)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்
சாலமன் பாப்பையா: அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே
மு.கருணாநிதி: பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்