எண்: 1227
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: பொழுதுகண்டு இரங்கல் (Lamentations at Eventide)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
சாலமன் பாப்பையா: காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
மு.கருணாநிதி: காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்