எண்: 1204
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: நினைந்தவர் புலம்பல் (Sad Memories)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
சாலமன் பாப்பையா: என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?
மு.கருணாநிதி: என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?